Saturday, December 18, 2010

கேட்காமல் கிடைத்த உறவு நீ மட்டும்தான் தோழியே

நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறந்த போதும்
எங்கோ ஒரு மூலையிருந்து
நீ என்னை நேசித்தாய்...
எனக்கு பிடித்த பொருட்கள் எல்லாம்
கிடைக்காமல் போன போதும்
என்னை உனக்கு பிடிக்கும் என்று,
ஒரு வார்த்தை கூறினாய்...
எனக்காக எல்லோரையும் கேட்டேன்
இறைவனிடம்
ஆனால்...
கேட்காமல் கிடைத்த உறவு...
நீ மட்டும்தான்....
தோழியே....
என்றாவது ஒரு நாள்
நீ என்னை வெறுப்பதாக இருந்தால்..
அதை இன்றே சொல்லி விடு..
இப்போதில் இருந்தே
கற்றுக் கொடுக்கிறேன்...
என்
இதயத்துக்கு....
வலிகளைத் தாங்குவது
எவ்வாறு என்று........!!!!!!!!

No comments:

Post a Comment