Wednesday, December 15, 2010

பிரியாத வரம் வேண்டும்..!

எப்போதும்
என் தனிமையில்
துணையாகும் உன் மனது
படிக்கின்ற வேளையில்
பாடமாக
உந்தன் குறும்புகள்
ம்ம்ம்
முதல் முதல்
புன்னகை முகத்தோடு
கையிலே ரோஜா மலரோடு
கல்லூரி வாசலிலே நீ காத்திருந்த
ஞாபகம் எப்போது நினைத்தாலும்
என்னை மலரவைக்கும்
இது மட்டுமா
அடிக்கடி உன்னைத் தேடிப் பார்க்கும்
கண்கள் தொலைவினில் நீ என்பதை
மறந்து என்னை ஏங்கவைக்கும்
இதயம் துடிக்கும் போதெல்லாம்
உந்தன் பெயரே ஒலிக்கும் காதோரம்
காதலனே காதலனே
கவிதையால் இணைந்தோம்
காலமெல்லாம் சேர்ந்து வாழ
இனி ஒரு பிரிவு வேண்டாம்
இமைப்பொழுதில் வந்துவிடு
உயிராக உனைச் சேர வரம் தந்து
உன்னோடு எனை வாழ வை

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete