Tuesday, October 18, 2011

அம்மா.....!

அம்மா அம்மா அம்மா அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா

Hit like if u luv yur அம்மா*

Wednesday, April 20, 2011

காதல்

கண்ணுக்கு மை அழகு,கவிதைக்குப் பொய் அழகு,அவரைக்குப் பூ அழகு,அவருக்கு நான் அழகு,என்னொடு நீ இருந்தால் இருள் கூடப் பேரழகு..


இதயங்கள் ஒன்றுச்சேரும் போது - அங்கு மொழீ தேவையில்லை உறவாட ----ஏன் என்றால் மவுனங்களே மொழீயாகின்றன- அதே போல்கண்கள் இரண்டும் பேசிக்கொள்ள - பார்வை ஒன்றே போதும் உறவாட,ஆனால் உதடுகள் இரண்டும் பேசிக்கொள்ள மட்டும்- ஏன் முத்தங்கள் தேவைபடுகிறது?


இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா எனதல்ல அதுவும் உனதல்லவா, எதைக் கேட்ட போதும் தரக்கூடுமே உயிர் கூட உனக்காய் விடக்கூடுமே, தருகின்ற பொருளாய்க் காதல் இல்லை தந்தாலே காதல் - காதல் இல்லை.


காதோடுதான்
நான் பாடுவேன், மனதோடுதான் நான் பேசுவேன், விழியோடுதான் விளையாடுவேன் -
உன் மடிமீதுதான் கண்மூடுவேன் ' ............ என் உயிர் நீதானே



கோடி ஆண்டுகாலம் வாழ்வதெல்லாம் வீணடா எந்தன் காதல் நீ அறிந்தால் போதும் அந்த ஓர் வினாடி, காதல் ஒன்றும் காயம் அல்ல காலப்போக்கில் ஆறிப்போக மனசெல்லாம் வாழுமே தழும்புகளாய் ......

நட்பு .

உண்மையான நட்பு நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வது தான் உண்மையான நட்பு .......


என்னை விட நல்ல நண்பனை நீ கண்டுபிடித்தால் என்னைக் கடந்து செல்... நான் உன்னை... தடுக்கமாட்டேன்... ஆனால், அவன் உன்னை விட்டு விலகிச்சென்றால் பின்னால் திரும்பி பார் அங்கே உனக்காக நான் இருப்பேன்...


பிரிந்து விட்டால் இறந்து விடுவோம்...! இது காதல்...! இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம்...! இது நட்பு...!


நீ நான் நட்பு மூவரும் ஓடிக்கொண்டிருந்தோம்..உனக்காக நானும்எனக்காக நீயும்விட்டுக்கொடுத்து ஓடும்போதுநட்பு நம்மை வென்றுவிட்டது.


நினைவில் வைத்துகனவில் காண்பதல்ல நட்பு !..மனதில் புதைத்து மரணம்வரை தொடர்வதுதான்
உண்மையான நட்பு !!



தோழா உன் நிழலாக நான்... என் நிழலாக நீ வர.... நம்... நிழலாக.... நம் நட்பு வரவேண்டும் ... இது சாத்திய‌மா?


எனக்கு ஒரு நண்பனாக இருப்பதற்கு உனக்கு தகுதி தேவையில்லை!எனக்கு ஒரு எதிரியாக இருப்பதற்கு உனக்கு தகுதியில்லை.


உன்னை உணரவைப்பதும் நட்பு உன்னை உயர்த்துவதும் நட்பு நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு உன் நண்பர்களைப் புரிந்துகொள், நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள், துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம், நட்பு மூலமாக...

Wednesday, March 16, 2011

நட்பு.


ஜீவன் உள்ளவரை மனிதன்....
பணம் உள்ளவரை மரியாதை.....
நேசம் உள்ளவரை பாசம்.....
என் உயிர் உள்ளவரை நம் நட்பு.

போ என்று சொன்னாலும் உன் நிழல் உன்னை விட்டு போகாது
அது போன்றது தான் என் நட்பு
ஆனால் என் நட்பு நிழல் அல்ல நிஜம்


ந‌ட்பும் காத‌லும் இணைகோடுக‌ள்
காத‌ல் ந‌ட்பாய் மாறிய‌தென்றால்
காத‌லில் வாய்மையில்லை!
ந‌ட்பு காத‌லாய் மாறிய‌தென்றால்
நட்பில் தூய்மையில்லை



மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை.

Monday, March 7, 2011

நட்பு (நண்பேன்டா)


தேசமே!
நெஞ்சம் கொள்ளும்
தன்னலம் இல்லாத 
நட்பினில்!
சுவாசமும் விசுவாசம்
கொள்ளும்
சுயநலம் இல்லாத
நட்பினில்

விளங்காத வினோதம்….!!!

   உன்னைக் காணாத நிமிடங்களிலெல்லாம்….
           என்னிடம் எட்டி நின்ற வெட்கம்….
     உன்னைக் கண்ட மறுநொடியே….
           என்னைக் கட்டி அணைத்தது ஏனோ….?!

வடிவங்கள்

அன்புக்கு வடிவம் அம்மா !
       அறிவுக்கு வடிவம் அப்பா !
பாசத்துக்கு வடிவம் குழந்தை !
      கருணைக்கு வடிவம் கடவுள் !
கற்பனைக்கு வடிவம் நினைவுகள் !
      காதலுக்கு வடிவம் உணர்வுகள் !
அழகுக்கு வடிவம் கண்கள் !
       என் ஆசைக்கு வடிவம் நீ !!!!……

Sunday, February 20, 2011

எங்கள் குடும்பம்

வாங்கிப் போட அப்பா
வரவு செலவு அப்பா
ஓங்கி அதட்ட அப்பா
உண்மை அன்பு அப்பா!

சமைத்துப் போடும் அம்மா
வாசல் தெளிக்க அம்மா
படிப்புச் சொல்ல அம்மா
பாசம் காட்டும் அம்மா!

நாட்டு நடப்பைத் தினமும்
நாளும் பேசும் தாத்தா
வீட்டுத் தோட்டம் தன்னில்
விதைகள் ஊன்றும் தாத்தா!

கையில் சோறு போட்டு
கதைகள் சொல்லும் பாட்டி
தெம்பு தரும் பாட்டி
கம்பு ஊன்றும் பாட்டி!

கொண்டை போடும் அக்கா
கோலம் போடும் அக்கா
சடையைப் போடும் அக்கா
சட்டையை தைக்கும் அக்கா!

கொட்டம் அடிக்கும் தம்பி
கூட்டம் கூட்டும் தம்பி
பட்டம் விடும் தம்பி
பம்பரம் ஆடும் தம்பி!

ஒன்றாய் கூடி உண்ணுவோம்
உலகச் செய்தி பேசுவோம்
நன்றாய் தூங்கச் செல்லுவோம்
நாள்கள் தோறும் மகிழுவோம்!


Wednesday, February 16, 2011

உன்னை மட்டும் சுமக்கிறது இதயம்

மனதின் உணர்வுகளை
வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை
இருந்தும் ஏனோ உன்னை
நினைக்காமல் இருக்க முடியவில்லை

மனம் இரண்டும்
இடம் மாறி இருந்தாலும்
இதயம் உன்னை மட்டும்
சுமக்கிறது தினந்தோறும்

என்றென்றும் உன் நினைவுகள்
தடம் மாறி போகாது
என் நிலை மறந்த போதும்
உன்னை நான் என்றும் மறப்பதில்லை

கண்ணிமை கவிழும் போது
கனவுகள் கூட பாடாய் படுத்துகிறது
உன் நினைவுகளை கொடுத்து

நீ எங்கிருப்பினும்
உன் நினைவுகள் மட்டும்
கோர்வைகளாய் இருக்கிறது என்னுள்...

Tuesday, February 15, 2011

என் பிரியமானவனே


எதற்காய்
இத்தனை பெரிதாய்
எனக்குத்தண்டனை,
தூரதேசம் சென்றாலும் என்
தூயஅன்பு உனை
தொடரவில்லையோ?
என் சிரித்த
அழகியமுகம்
உனைப்பயமுறுத்தியதில்லையே?
உன் தனிமை
உணர்த்தியிருக்குமே
என் உள்ளத்தை,
கண்ணீர் கூட
விட்டிருப்பாயே என்
காதலை எண்ணி?
இரகசியங்கள் பல
நமக்கு மட்டுமாயே
தெரிந்தவற்றை நீ
அடிக்கடி யோசித்து
அழுதும் இருப்பாய் என்பதில்
ஐயமில்லை எனக்கு.
என் பிரியாணி வாசம்
உன் பசித்த வயிற்றில்
என்னை நிறைத்திருக்குமே?
சண்டைகளைக் கூட
சரித்திரமாய் எண்ணி
ரசித்திருப்பாயே?
இவை எல்லாம்
நிகழ்ந்திருந்தால் நீ
இன்னும் என் பிரியமானவனே.
யாரும் நுழையமுடியா
அவசர அணைப்புடன்
அன்புடைய நான்.

காதலர் தினம்


அன்பே சோ்ந்திருந்தது சில நாள் 
பிரிந்திரிந்தது பல நாள் - பிரிவிலும்
சுகம் கண்டேன்
உண்மையான உன் அன்பினால்
இரந்தும் பிரிவே
தொடர்கின்றது - நமக்குள்
என்று வரும் இந்த
பிரிவிற்கு முற்றுப்புள்ளி
காத்திருக்கும்  களங்கமில்லா
காதல் சாகும் வரை   
காத்திருக்கிறேன் அன்பே
அடுத்த காதலர் தினத்தில்
ஆவது ஒன்றுசோ்வோம்
என்ற நம்பிக்கையில்....

Saturday, February 5, 2011

யார் இவன் ?


புது உலகை நோக்கும்
புத்தம் புது புத்தி சாலியோ . . .

பார் என பல பேர் சொல் கேட்டு - இந்த
பாரதத்தை ஆழ வந்த மழலையோ.. 
 .

குற்றம் என்பதை சிறிதும் அறியா இளம் மகானோ 
நீ வா
இப்பூவுலகை

ஆழ
உனக்காக காத்திருக்கிறது
பல மேடைகள் பல பட்டங்கள்
உன்னை வரவேற்க நாங்கள் . . .

வெற்றியின் வாசல்

இதம் எனும் நான்கெழுத்தில்
இதம் எனும் சுகம் ஒளிந்திருக்கிறது
அதைப் புரிந்து கொண்டால்
இதமாய் வாழலாம் என்றும் வாழ்வினிலே.



வாழ்க்கை எனும் படகினிலே
வாகை எனும் வெற்றி ஒளிந்திருக்கிறது
அதைப் பிடித்துவிட்டால்
சுகமாய் வலம் வரலாம் என்றும் வாழ்வினிலே.


ழைப்பு எனும் உயர்வினிலே
உப்பு நீர் எனும் வியர்வை ஒளிந்திருக்கிறது.
அதை வெளியேற்ற வெளியேற்ற
பிரகாசமாய் சுடர் விடலாம் என்றும் வாழ்வினிலே.