Saturday, December 25, 2010

அம்மா (amma)

அன்பென்றால் அம்மா உன் வடிவல்லவா
அணைப்பதே உந்தன் தொழில் அல்லவா- என்
கண்கண்ட தெய்வம் நீ அல்லவா
கடவுளாய் காண்பேனே உன்னை அல்லவா


உணர்வின் உறைவிடம் உன் மனமல்லவா -என்
உலகின் அறிமுகம் உன் முகம் அல்லவா
அழகாய் சிரிப்பது உன் குணமல்லவா
அடித்தாலும் அணைப்பது தாய் இனமல்லவா


ஐயிரு மாதங்கள் என்னைத் தாங்கினாய்
ஆயிரம் கடவுளை நீ வேண்டினாய்
இரத்தத்தை பாலாக்கி என்க்கு ஊட்டினாய்
இசைப்பாட்டு நீ பாடி என்னைத் தாழாட்டினாய்
அழகான பெயர் ஒன்றை நீ சூட்டினாய்
அன்பாக நான் வாழ வழிகாட்டினாய்
ஒரு ஜென்மம் போதாது உன் சேயானால்
ஒருகோடி ஜென்மம் எடுப்பேன் நீயே என் தாயானால்...

No comments:

Post a Comment