Thursday, December 16, 2010

மரணத்தின் வாசலில்...

மனத்தின் ரணங்களால்
மரணத்தின் வாசலில்
மண்டியிட்டு தினமும்
கண்ணீர் வடிக்கும்

நான்
ஒரு பெண்
என்னோடு கதை
ஆனால் வதைக்காதே

நான்
ஒரு நிலவு
என்னை ரசித்திடு
தொட நினைக்காதே

நான்
ஒரு கிளி
எனை பறக்கவிடு
அடைக்க முயலாதே

நான்
ஒரு வாசமுள்ள பூ
மோர்ந்து பார்
கசக்கி எறியாதே

நான்
ஒரு புல்லாங்குழல்
என்னை வாசித்திடு
முறித்து எறியாதே

நான்
ஒரு புரியா கவிதை
எடுத்து படி
மடித்து வீசாதே

நான்
ஒரு நெருப்பு
எரிய விடு
அணைக்காதே

தயவுசெய்து
தள்ளி நில்லு
எனை அணைக்காதே
மரணத்தின் வாசலில் நான்

No comments:

Post a Comment