Wednesday, March 16, 2011

நட்பு.


ஜீவன் உள்ளவரை மனிதன்....
பணம் உள்ளவரை மரியாதை.....
நேசம் உள்ளவரை பாசம்.....
என் உயிர் உள்ளவரை நம் நட்பு.

போ என்று சொன்னாலும் உன் நிழல் உன்னை விட்டு போகாது
அது போன்றது தான் என் நட்பு
ஆனால் என் நட்பு நிழல் அல்ல நிஜம்


ந‌ட்பும் காத‌லும் இணைகோடுக‌ள்
காத‌ல் ந‌ட்பாய் மாறிய‌தென்றால்
காத‌லில் வாய்மையில்லை!
ந‌ட்பு காத‌லாய் மாறிய‌தென்றால்
நட்பில் தூய்மையில்லை



மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை.

Monday, March 7, 2011

நட்பு (நண்பேன்டா)


தேசமே!
நெஞ்சம் கொள்ளும்
தன்னலம் இல்லாத 
நட்பினில்!
சுவாசமும் விசுவாசம்
கொள்ளும்
சுயநலம் இல்லாத
நட்பினில்

விளங்காத வினோதம்….!!!

   உன்னைக் காணாத நிமிடங்களிலெல்லாம்….
           என்னிடம் எட்டி நின்ற வெட்கம்….
     உன்னைக் கண்ட மறுநொடியே….
           என்னைக் கட்டி அணைத்தது ஏனோ….?!

வடிவங்கள்

அன்புக்கு வடிவம் அம்மா !
       அறிவுக்கு வடிவம் அப்பா !
பாசத்துக்கு வடிவம் குழந்தை !
      கருணைக்கு வடிவம் கடவுள் !
கற்பனைக்கு வடிவம் நினைவுகள் !
      காதலுக்கு வடிவம் உணர்வுகள் !
அழகுக்கு வடிவம் கண்கள் !
       என் ஆசைக்கு வடிவம் நீ !!!!……