Monday, December 27, 2010

உறுதியோடு வாழ்.


நியமற்ற இவ்வுலக வாழ்விலே
நிழல்களைக் கண்டு
உன்னை நீயே
ஏமாற்றிக் கொள்ளாதே..!
நீ எதற்காகப் பிறந்தாய்
தோல்வியினைக் கண்டு துவழவா..
இல்லை..!
வெற்றியைக்கண்டு அகந்தை கொள்ளவா..
அதுவும் இல்லை..
வெற்றியையும் தோல்வியையும்
இரு கண்களாய்க் கொண்டு
உறுதியுடன் வாழப் பழகிடு...
சமுதாயம் எனும்
குப்பைத்தொட்டியிலே – நீ
குன்றிமணியாய் வாழ்ந்திடு
நீ எதற்காக அச்சமடைகின்றாய்..
சமுதாயத்திற்காகவா...
சமூக சாஷ்திரத்தை ஒருபுறம்
மூட்டை கட்டு..
உனக்காக பிறர் அழுவதையோ..
சிரிப்பதையோ..
விரும்பாதே.. – உனக்காக
நீயே அழு..
நீயே சிரி..
உன் இலட்சியகளை வென்றிடு...
உன்னை வெல்ல
யாரும் இல்லை என்ற
உறுதியோடு வாழ்..
 ..




No comments:

Post a Comment