Monday, December 27, 2010

நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே
நாளைய உலகம் காண்போமா ?
நான் உன்னை சுமக்க
நீ என்னை தாங்க
நட்பினை நெஞ்சில் கொள்வோமா ?
நம்பிக்கை நம்மில் தளராதே
நம் பாசம் எம்மில் விலகாதே
இரு கை சேர்ந்தே உலகை ஆள்வோமே
இதைக் கண்டு இயற்கையும் வியக்குமே !
நீ அருகில் இருக்கையில்
தோல்வி என்னை நெருங்காதே !
நண்பா உன் சொல்லில்
தீமை என்று கிடையாதே !

No comments:

Post a Comment